சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்- 3 (கோவிலூர் மடாலயம் வெளியிடும் ‘திருநெல்லை’ ஆன்மீக மாத இதழில் பதிவிடப்பட்ட வரலாற்றாய்வுத் தொடர்) அப்பருடைய வாழ்க்கையை எழுதத் தொடங்கும் சேக்கிழார், ‘திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்’ என்று முதல்பாடலில் குறிக்கிறார். திருத்தொண்டின் அகண்டபொருளைத் தம் வாழ்வாலும் பதிகங்களாலும் உலகிற்கு விளக்கிய வாகீசரை அறிமுகப்படுத்த, எவ்வளவு துல்லியமான சொல்தேர்வு! அப்பர், ‘தொண்டுசெய்து என்றும் சோற்றுத்துறையார்க்கே உண்டுநீ பணிசெய் மடநெஞ்சமே’(5.033.10) என்று முதலில், தொண்டின் சிறப்பைத் தம் நெஞ்சுக்குத்”திருத்தொண்டின்“திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Category Archives: சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் -1
சிந்தையில் சிவமும் வாக்கினில் தமிழும் வைத்த நாவுக்கரசர்
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் -1 (கோவிலூர் மடாலயம் வெளியிடும் ‘திருநெல்லை’ ஆன்மீக மாத இதழில் பதிவிடப்பட்ட வரலாற்றாய்வுத் தொடர்) தமிழக வரலாற்றில், சைவம் தழைத்த காலம் என்றும் சைவ மறுமலர்ச்சிக் காலம் என்றும் பத்திமைக் காலத்தை ஆய்வாளர்கள் குறிப்பர். அவ்வாறெனில், சிவனை வழிபடும் வழக்கம் பத்திமைக் காலத்துக்கு முன்பே இருந்தது தெரிகிறது. தொல்காப்பியக் காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களும் முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை”சிந்தையில்“சிந்தையில் சிவமும் வாக்கினில் தமிழும் வைத்த நாவுக்கரசர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.